செவ்வாய், 18 செப்டம்பர், 2018

பாலை-அவ்வை என்னும் கொற்றவை



தமிழனின் தடயங்கள் இன்னும் எங்கோ ஒரு இடத்தில்  புதைந்து கிடக்கிறது அதனை பல்வேறு வழிகளில் பலர் இவ்வுலகிற்கு எடுத்துரைத்தாலும் இதில் உள்ள வேர்களின் ஆழம் மிக நீண்டது..

முன்பே இதனை முல்லை நெய்தல் மருதம் குறிஞ்சி என தொல்காப்பியம் தரவுகள் நாம் இன்றும் கடைபிடிக்கும் பண்டிகைகள் வழக்கங்கள் மற்றும்  இலக்கியம்,புராணம், இதிகாச தடயங்கள் என இங்கு போற்றபட்டவர்கள்..

மற்றும் இதன் தெய்வங்கள் யார் யார் என தெளிவாக விவரித்தது போல பாலை என்ற திணையும் இங்கு உண்டு..

இதன் காலம் தொண்மையான குமரி கண்டம் என்பதுவே.. நால்வகை தீவே நாவலந்தீவு..
இதில் ஐந்தாம் திணையான பாலை அனைத்து திணைகளிலும் உள்ளது..

இந்த உலகில் மதங்கள்  பல உண்டு அவ்வாறு திரிய காரணம் மடம்.. பல்வேறு காலகட்டங்களில் பலரால் தோற்றுவிக்கபட்டு கட்டமைக்கபட்டதே..

மடம்-மதம்-மயம்-சமயம் என தோற்றத்தை தமிழில் எளிதாக கண்டுபிடித்து விடலாம்..

இந்த கட்டமைப்பு உள் சென்றால் வழிமுறைகள் இதில் கடைபிடிக்கும் நெறிமுறைகள் பல தெரியும்.. ஆனால் தமிழர்களின் இந்த
திணை வாழ்வியலை வைத்தே
உலகில் பல மடங்கள் கிளைகளாக பிறந்தது அதில் உலகிற்கு என்னற்ற நல்வழிகளை சொன்னவர்கள் கடவுளாக இன்று போற்றபடுவர்கள்.. இவர்கள் மடம் என்னும் இடத்தை மட்டும்  நிறுவவில்லை மக்களின் மனதில் தங்களுக்கு என இடத்தை தக்கவைத்துக் கொண்டவர்கள்...

ஆறுமார்கத்தை உள்ளடக்கிய ஏழாவது மார்கம் என கொண்ட ஆசீவகம் (சித்தர் வாழ்வியல்)  பிறப்பதற்கு முன்பே தமிழ் திணைகளில் இயற்கை மற்றும் இறந்தோர் வழிபாடுகள்  பிறந்துவிட்டது..
இதன் பின்னர் தோன்றிய  மற்ற மடங்களிலும் (மதங்களிலும்) தமிழின் தாக்கம் இருப்பதையும் பல புராணங்கள் ஒன்று போல் மற்ற மார்கங்களில் இருப்பதை காணலாம்.. அதே போல அவர்கள் மூதாதையர் என குறிப்பிடுவது குமரி கண்டத்து மக்களே. .

பாலை திணை இறந்தோர் வழிபாடு மட்டும் அல்ல இயற்கை வழிபாட்டை இசையோடு உள்ளடக்கியது..

பாலை நிலம் சுரமும் சுரம் சார்ந்த இடமும் ஆகும். சுரம் என்பது வறண்ட, பயனற்ற வெயில் கொளுத்தும் காட்டுப் பகுதியைக் குறிக்கும். எனவே பாலை எனத் தனி ஒரு நிலப் பகுப்பு இல்லை. வறட்சியின் காரணமாகவே பாலை நிலம் தோன்றுகிறது. என என்பது போல இசை தோன்றிய நாண்கு திணைகளிலும் குறித்தது பாலை திணையே..

கொற்றவை என்றால்  பார்வதி என்று பொருள் இது   குறிஞ்சியில்..
கொற்றவை என்றால் மயேசுவரி என்று பொருள் இது முல்லையில்..
கொற்றவை என்றால் வேதநாயகி என்று பொருள் இது மருதத்தில்..
கொற்றவை என்றால் மாரி என்று பொருள் இது நெய்தலில்..
கொற்றவை என்றால் காளி என்று பொருள் இது பாலையில்..

குறிஞ்சி-வெட்சி
முல்லை-வஞ்சி
மருதம்-உழிஞை
நெய்தல்-தும்பை
பாலை-வாகை
கைக்கிளை-பாடாண்
பெருந்திணை-காஞ்சி

ஆக இந்த அகத்தினை மற்றும் புறத்திணைகளில் ஏழு பெண் தெய்வ வழிபாடு என்பதே சப்தகன்னி வழிபாடு.. இவர்களே பாவை என்னும் அவ்வை (ஔவையார்கள்)...


















அவ்வை என்றால் சங்க காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் பண் பாடல் தந்து வாழ்ந்த வயதான பெண் புலவர்களை குறித்தது இந்த சப்தகன்னி யில் இருந்து தான்..

இதனை விரிவாக பார்க்கும் முன் பாலை நிலத்தின் தெய்வமாகிய கொற்றவை யார் என்பதை கண்டுகொள்வோம்.. பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை இராவணன் மனைவி மண்டோதிரி.. இவள் மயனின் மகளே..

அதே போல மண்டோதரி என்றால் மண் தோத்தரம் (மண்ணையும் மன்னனையும் புகழ்ந்து பாடுவது).. மண்டோதிரி என்றாள் மண்ணையும் மன்னனையும் புகழ்ந்து பாடுபவள் என்றே பொருள்..

பெண் தெய்வம் வழிபாடு என்பது நம் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது...
இதனை இந்து மதம் சக்தி வழிபாடாக கட்டமைத்தது சிறிது காலம் முன்பு தான்
ஆனால் இதற்கு முன் தேவி வழிபாடு மற்ற மதங்கள்
பிறப்பதற்கு முன்பே தோண்றியது..

இதில் மற்ற மதங்களில் மறைமுகமாக இருப்பதை இன்றும் நாம் அறியலாம்.. மேரியை இயேசுவின் தாயாக கருதி தாய்மையை போற்றும் வழிபாடாக கிருஸ்துவம் இருக்கிறது.. உருவ வழிபாடு இல்லாத இஸ்லாம் என்பது தூய பெண் தெய்வ வழிபாடே இதனை அவர்களின் கடைபிடிக்கும் வழங்களில் நாம் எளிதில் காணலாம்..

இவையெல்லாம் குறிஞ்சி திணையில் இருந்து பிறந்த பெண் தெய்வ வழிபாடுகள்..
வேட்டை சமூகமான குறவர் வழிபாட்டில் அமாவாசை அன்று இறந்தோர் வழிபாடு செய்வது போல பெளர்ணமி அன்று சூல வழிபாட்டை காணலாம்..

 இறந்த பெணகளை தங்கள் குலம் காப்பவர்களாக கருதி
வழிபடும் முறை.. அதே போண்று பெண்கள் நிலவாக நதியாக மண்ணாக காண்பது நமது தமிழ் மண்ணில் தோன்றியதே.. பெளர்ணமி வழிபாடு பிரிதலும், பிரிதல் நிமித்தமும் என பாலை திணையின் உரிபொருள்..

அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேரும் அதே பவுர்ணமி அன்று சூரியனை விடுத்து பிரிந்து நிலவு நெடுந்தூரம் செல்லும்..
அதே போல உருவமில்லா இஸ்லாம் மார்கம் நிலவை அடிபடையாக கொண்டே அணைத்தும் கட்டமைக்கபட்டள்ளது..

அதே போல அம்மன் தேவி சூல வழிபாடுகள் பௌர்ணமியை மட்டும் அல்லாது நாட்களில் வெள்ளிகிழமையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.. இதனை போன்றே வெள்ளிகிழமை தவறாமல் வழிபடும் முறையை இஸ்லாமிய சமயம் நம்பிக்கையாக கொண்டுள்ளது.

இந்த தாய் தெய்வம் வழிபாடு என்பது பிற்காலத்தில் வாழ்ந்த ஔவைகள் தங்கள் வரிகளில் பதிந்துள்ளதை நாம் காணலாம் *தாயை சிறந்த ஒரு கோயிலும் இல்லை* என பெண்ணை தெய்வதோடே இனைத்திருக்கின்றனர்..

அதே போல மற்ற சமயம் மார்கத்தோடு இந்த சக்தி வழிபாட்டை அவ்வளவு எளிதாக சேர்க்க முடியாது யாராலும் பின்பற்றுவது என்பது கடிணமே..

சக்தி வழிபாட்டில் உடலை வருத்தி செய்வது என்பது ஆண்களை விட பெண்கள் அக்காலத்தில் எவ்வளவு வலிமையானவர்கள் என நன்றாக புரிந்துகொள்ள முடியும்..

அதே போன்றே குறிஞ்சியில் மலைமகளான பார்வதி என்பது வார்வதியே.. இதனை சூல வழிபாடு மட்டுமல்லாமல் குறி சொல்ல முன் அவர்கள் அருள்வாக்கு தர குப்பிடும் வழக்கத்தில் காணலாம்..

குறி மட்டும் அல்ல பக்தியில் சாமி வந்து ஆடுவது.. வேம்பு மரத்தை வழிபடுவது.. மஞ்சள் நீரிட்டு  என உடுக்கை அடித்து குறி சொல்வது என அம்பிகை என ஈஸ்வரி என வழக்கங்கள் இன்று அழியாமல் பல ஆண்டுகள் கடந்து வந்துள்ளது..

அதனை போண்றே தச்சர் குறவர் கொல்லர் வழிபாட்டை இதன் தீசட்டி ஏந்தும் சாயலில் காணலாம்.. இதனை முல்லை நிலத்தில் அதிகம் காணமுடியும்..

 மஞ்சள் நீரிட்டு ஆடுகள் காணிக்கை செலுத்துவது பொங்கல் வைப்பது மட்டும் அல்ல அக்காலத்தில் குறி சொல்லும் முல்லை நிலத்தவர் கையில் சக்கரத்தை பச்சைகுத்தி வைத்திருப்பது என இதன் ஆழம் சங்கு சக்கரத்தோடு
காட்சி தந்து துடிக்கை அடித்து குறி சொல்லும் துர்கையோடு சேர்ந்திருக்கிறது..

வாளோடு காட்சி அளிக்கும் அரசியாக அம்பிகை அம்பாள் என போற்றபட்டது ஒரு பெண் அரசியே..

 மருதநிலத்திலத்தில் வரண்ட காலங்களில் கரகமாக எடுத்து நீரோடு மழை வேண்டியே அம்மனை வழிபடுவது என்பது வேதநாயகியான இந்த கொற்றவையே.. இதனை இந்தபகுதியில் நடைபெறும் தீமிதி திருவிழாவில் காணலாம்..

 அதனை போன்றே இங்கு கும்பம் கரகம் என மண்ணையும் நீரையும் வழிபடுவது இதனை சுமந்து வந்து ஊர் கூடி கொண்டாடுவது என நீரை வழிபடும் மக்கள் தமிழ் தொண்மையான இயற்கை வழிபாடை காணலாம்..

நெய்தலில் காணும் வழிபாடும் இந்த மூன்றையும் சேர்த்தே உள்ளது தீசட்டி கடலன்னை வழிபாடு கரகம் எடுத்து கடலில் பூஜை செய்வது ,தீமதி திருவிழா என போற்ற முத்துமாரியம்மன் என நெய்தலின் முத்தோடு இருப்பதை காணலாம்..

அது மட்டும் அல்லாது எந்த தாயும் ஒரு குழந்தை பசியோடு இருப்பதை விரும்பமாட்டாள்.. ஆடி மாதம் காற்றின் வேகம் அதிகமாகயிருக்கும் கடலுக்குள் செல்ல இயலாது.. இக்காலத்தில் கூல் ஊற்றி முல்லை மருதம் மக்கள் நெய்தல் மக்களுக்கு உணவளித்ததே ஆடி மாதம் முழுவதும் கூல் ஊற்றுவது... ஒரு திணை மக்களுக்கு உணவளிக்க பண்டிகை திருமணம் என அனைத்து நல்லவையும் தள்ளி வைத்து தமிழனால் இன்றும் அழியாமல் பாரம்பரியமாக வந்துள்ளது..

கொற்றவை என்னும் இவள் ஆண்ட இந்த நிலபரப்பே குமரி கண்டம்.. அவளே குமரியை ஆண்ட மண்டோதிரி என்னும் மீனாட்சி அம்மன்..

ஏழு சுரமும் சப்தகன்னியும் கொட்டும் முரசும் கொற்றவை..


தமிழ் இலக்கியத்தில் பார்வதியை-மலைமகள், கொற்றவை, பழயோள் என திருமுருகாற்றுப்படை பதிந்துள்ளது..


மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!

வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ!

இழை யணி சிறப்பின் பழயோள் குழவி!

பழணம் என்றால் மருதநிலம் கொண்ட வயல் பரப்பு.. பழயோள் என்றால் வயல் நிலம் கொண்டவளே..


திருவாசகமோ கொற்றவையை  என தெளிவாக விவரித்துள்ளது..

*இயக்கி மார்அறு பத்து நால்வரை*
    
*எண்குணம் செய்த ஈசனே*

*மயக்க மாயதோர் மும்ம லப்பழ*
    
*வல்வி னைக்குள் அழுந்தவும்*

*துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டுநின்*

    *தூய்ம லர்க்கழல் தந்தெனைக்*

*கயக்க வைத்தடி யார்மு னேவந்து*

    *காட்டினாய் கழுக் குன்றிலே*

இயக்கி என்பது சக்தி தோற்றமே சப்தகன்னியர் மற்றும் பார்வதி இந்த எட்டு பேரே எட்டு திசைகளை குறித்தவர் இதன் எட்டு வடிவ பெருக்கமே (8×8)  ஆறுபத்திநான்கு.. சக்திகள் இது எட்டு திசைகளை குறித்தது..

புராணத்தில் முருகனை காத்து வளர்த்து 6 செவிலி தாய் மற்றும் கங்கை..
என்பவர்களே சப்தகன்னியர் எட்டவது பார்வதியோடு சேர்த்துவே சக்தி வடிவமே இவர்கள் எட்டுதிசையும் காக்க
கற்று தந்த கலையே ஆயகலைகள் ஆறுபத்தி நான்கு முருகனுக்கு.. . இதனை முருகனின் புராணங்களில் மறைமுகமாக நமக்கு கொடுக்கபட்ட செய்தியே..


கங்கை என்பது அங்கை என்னும் அங்காளம்மன் நாகர் குல மலைமகள்.. 

இதனை தொடர்ந்து வரும் எல்லையம்மன் 
பேய்ச்சியம்மன்
முப்பிடாரியம்மன்
காளியம்மன்
பிடாரியம்மன்
பத்திரகாளியம்மன்
என சப்தகன்னிகளை ஊர்களில் இன்றும் வணங்கி வருவதை காணலாம்..

சப்தகன்னி வழிபாடு அதிகமாக மருதநிலத்தில் தவறாமல் காணலாம்.. இதனோடு கருப்புசாமி அல்லது ஐயனார் வழிபாடு ஊர்களில் சேர்ந்தே இருக்கும்..

இது குறவர் வழிபாடான குறிஞ்சி திணையில் இருந்து  வந்த குறவர் யக்கர்கள் என பல்வேறு சமுகத்தினரும் கடைபிடித்த அமாவாசை அன்று கருப்பு வழிபாடும்..
பௌர்ணமி அன்று சக்தி வழிபாடும்..

 இந்த சப்தகன்னியர் வழிபாடு என்பது
முளைப்பாரி போட்ட மறுநாளில் இருந்து வீட்டின் முன்பு வட்டமாக நின்று கொண்டு பெண்கள் கும்மியடிப்பார்கள். இந்த கும்மி ஓசை எழுப்புவது போல் முளைப்பாரியும் முளைத்து வெளிவரும் என்று நம்பிக்கை. அதில் இருந்து ஒன்பதாம் நாளில் இவ்வாறு பாதுகாத்த முளைப்பாரியை ஊர் பொது இடத்தில் வைப்பார்கள்.

பின் அந்த முளைப்பாரிகளை சுற்றி வட்டமாக பெண்கள் நின்று பாடலுடன் கும்மி கொட்டுவர். இன்னொரு பக்கம், அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம் என்று பாரம்பரிய கலைகளை சிறுவர்களும், இளைஞர்களும் செய்து காட்டுவர். அந்த முளைப்பாரியை தூக்கியபடி இதே ஆரவாரத்துடன் ஊர் முழுக்க சுற்றி வருவார்கள். பின் ஊரே ஒன்றுகூடி பொங்கல் வைத்து, கொழுக்கட்டை, மாவிளக்கு, துள்ளுமாவு, இளநீர், பானகம், நீர்மோர், வேப்பிலை கரகம் வைத்து பெண் தெய்வத்திற்கு படைப்பர்

இந்த கும்மியடித்து குளவையிடுவது சப்தகன்னியர்களை மற்றும் அம்மனை எட்டு திக்கில் இருந்து வரவேற்பதே..

இந்த குளவை சத்தம் கும்மி கொட்டும் முளைப்பாரி எடுக்கும் மருதத்தில் மட்டும்
அல்ல குறிஞ்சி முல்லை நெய்தல் என பெண்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் கும்மிகொட்டி குளவையிடுவதை காணலாம்..


*கொற்றவைக்குரியதாகலின் கடவுள் வாகை எனப்படும். மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை* - அகநானூறு . 136; 10

 *மல்குசுனை உலர்ந்த கல்கூர் சுரமுதல்குமரி வாகைக் கோலுடை நறுவி மடமாங் தோகைக் குடுமியின் தோன்றும் கான நீளிடை* -குறுந்தொகை. 347:1-4 " 

*போர்படு மள்ளர் போக்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய்வி ஏய்ப்ப பூத்த முல்லை புதல் சூழ் பறவை* -பதிற்றுப்பத்து  66:14-16

*கூகைக் கோழி வாகைப் பறந்தலை*-குறுந்தொகை 303:3

*வாகை வெண்பூப் புரையும் உச்சிய தோகை* -பரிபாடல்.14:7-8 

*அத்தவாகை அமலைவால் கெற்று அரி.ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம்*-குறுந்தொகை 369:13 

*கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற்று ஒலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னியோரே* -குறுந்தொகை , 7:3-6 

பாலைக்கு உரியது வாகையே..
வாகை-என்றால் வெற்றி 

வாகை மரம் சித்த மருத்துவத்தில் வீக்கம், கொப்புளம் வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

வாகை என வெற்றி கொட்டே இக்கும்மியும் குளவையும்..
இது பின்னாளில் வெற்றியின் கொட்டாக கைதட்டல் விசில் என தமிழின் மூலம் கொண்ட வளர்ச்சியே..

வாகை மலர்ச்சூடுதல் வெற்றிக்களிப்பை உணர்த்தும் பாலை திணைக்கு உரிபொருளான பூ இதனை தொல்காப்பியம் பதிந்துள்ளது .

*மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த* 

*கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே*


சப்தகன்னிகள் என்றதும் ஏழு பெண் உருவங்கள் என நினைவிக்கு வரும்.. அதே போல ஏழு வண்ணங்கள், ஏழு சுரம் என ஏழு என வர கங்கையோடு சேர்த்த ஆறு கன்னிகளே..

இதனை புராணம் பல்வேறு காட்சிகளில் நமக்கு சிறப்பாக சித்தரித்தும் இதன் பொருள் இன்று வரை தவறாகவே பதிந்துள்ளது..

சித்தமருத்துவம் பல நோய்களுக்கு அக்காலத்தில் மருந்துகா இருந்தாலும்.. அம்மைக்கு வேம்பும் மஞ்சளும் மருந்தாக இருந்தது..

வேம்பை கடவுளாக வழிபட்ட மக்கள் இதனை மகமாயி என உருவகபடுத்தினர்.. ஊரில் அனைத்து மத்திய பகுதியிலும் ஊரை நோய்களின் இருந்து காக்க வேம்பு வழிபாடு இருப்பதை காணலாம்..


இதன் தொன்மை  காமாரி.. உடலில் உண்டாகின்ற கொப்புளங்களை ஆற்றுவது  கருமாரி என நோய் தீர்க்கும் சித்த மருத்துவரே..


ஏழு வண்ணங்கள் இதன் கலைகளில் ஏழு நிலைகளை குறிக்க பிற்காலத்தில் குருகுலம் வளர்த்த சித்தர்கள் கையாண்டனர்.. சப்தகன்னிகளே குருகுலம் மருத்துவம் தந்த பென்சித்தர்கள்..


இன்னும் சரஸ்வதி என்பது வீணையுடன் வீற்றிருக்கும்  பிரம்மினின் கலைவாணி.. சரம் என்றால் சேர்த்து தொடுப்பது.. சரவதியே சரஸ்வதி என்று இன்று வழக்கத்தில் இருப்பது  இந்த சப்தகன்னிகளே.. இதனை ஒரே கல்லில் பின்னாளில் வடித்த சப்தகன்னி வழிபாட்டில் காணலாம்..

நெடில் எழுத்தான
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
ச ரி க ம ப த நி
இதுவே இசைக்கான மூலம்..இவை உணர்ச்சிகளின் வெளிபாடு.. இதனை கோர்பதே இசை..

சரஸ்வதி என்பது கல்விகான கடவுளாக இருக்க காரணம் இவளே ஆய கலைகள் 64 க்கும் கலைமகள்.. இந்த கங்கை என்னும் சரஸ்வதியே இராமாயணம் காட்டிய சீதை.. இவள் இராவணன்-மண்டோதிரி மகளே..

இதனை வழியுறுத்தி சிம்மத்தில் இருந்து சூரியன் புகும் ஆறாவது மாதம் புரட்டாசி என ஆறுகன்னிகள் சிறப்பித்தனர் சோதிடத்தில் இந்த ஆறு கன்னிகளே கன்னிராசியாக  குறித்தனர்.. வடக்கில் சிம்ம வாகணத்தில்
அமர்ந்த துர்கையாக பக்தி இலக்கியத்தில் பதியபட்டது. .


புரட்டாசி மாதத்தில் வரும்  வளர்பிறைப் பாட்டிம்மை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நவராத்திரி  நோன்பு இறுதி நவமியில் சரஸ்வதி பூஜை என்பது கன்னிமார்களை வணங்குவதே..அன்றே குழந்தை கல்வி சேர்க்கை என பல இன்று கட்டமைக்க பெற்றது இதன் கருபொருளே..



முற்றும்..


நன்றி
🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

திங்கள், 10 செப்டம்பர், 2018

குறிஞ்சி - இராவணன் என்னும் சிவன்



தமிழன் விட்டு சென்ற தடயங்கள் பல இன்னும் உள்ளது.. அதில் சிவனும் ஒன்று..

இராமாயணம்

இராவணன் புதல்வன் அட்சய குமாரன் முருகனே..(சேயோன்)

மூத்தவன் இந்திரசித்தன் இந்திரனே. .(வருணன்)

இதில் சிவதாசன் என்னும் இராவணனே முதல் பாண்டியன்.. இவனே சிவன்..

இதனை கானும் முன்பு குறிஞ்சிக்கான சரியான தொல்காப்பிய வரிகளை எடுத்து கொள்வோம்..

வேந்தன் மேய தீம்புணல் உலகமும்..

தீம்புணல் என்றால் நன்னீர்
இவை உருவாகும் இடம் மலையே..

மலையும் மலை சார்ந்த இடமே குறிஞ்சி..

வேந்தன் என்றால் இந்திரன் என தவறாக சித்தரித்துள்ளனர்.. பின்னாளில் இலக்கியங்களில் இதனை குறிஞ்சிக்கான தெய்வமாக முருகன் மாற்றபட்டது மட்டுமல்லாமல் இந்திரன் என்றால் வேந்தன் என்று பொருள் பட பதிந்தாலும் ..

தமிழில் காலமும் சுழலும் ஒருவன் என்னத்தான் முகமுடி போட்டாலும் தோலுரித்து விடும்..

வேந்தன் என்றால் தேவேந்திரன்-வேந்திரன் என்னும் வேந்தன் என்று குறிப்பிடுகிறோம்..

ஆனால் வேந்தன் என்றால் சிவன்

வேய்தல்-வேய்தன்-வேந்தன்
வேய்தல் என்றால் ஏய்தல்..
குறி வைத்து ஏய்பவன் வேடன்
(குறிவன்-குறவன்)

அவ்வை தன் பாடலில் கொன்றை வேந்தன் என சிவனை பதிவு செய்துள்ளார் ...
வேந்தன் என்றால் அரசன்..

 அதே போல மயன் வடித்த சிலையும் நடராசன் சிலை என இன்னும் தமிழ் வழக்கில்  நீங்காமல் உள்ளது..

நடராசன் என்றால் நடனமாடும் அரசன் என்றே பொருள் அவ்வாறு தமிழ் இலக்கியத்தில் புரட்டினால் நடனமாடிய முதல் அரசன் இராவணன்..

கொன்றை வேந்தன் என்றால்
கொன்றை மரத்தோடு ஒப்பிட்டு அடையாளத்தை மறைத்துள்ளனர்..

கொன் இறை வேந்தனே - அச்சமின்றி இறைக்கு வேட்டையாடுவன் என்பதே..

சிவம் என்னும் சொல் சிகப்பில் இருந்தே பின்னாளில் இவரை அடையாளம் காணமுடிகிறது..
குறவர் வழிபாடுகளில் சிகப்பு வண்ண ஆடை சிவனுக்கும் மற்றும் கருப்பு வண்ண ஆடை காளிக்கும் இன்று குறித்து நிற்கிறது..

தமிழ் இலக்கியத்தில் சிவ சிவம் என்னும் சொல் அரிதாகவே உள்ளது..

ஈசன் ஈசுவரன் என அடிகோடிட்டு சிவனை காணலாம்..

சுவன்-சுவரன்-விசுவன்-விசுவநாதன்-ஈசுவரன்-ஈசன் என்று சிவனை குறித்தது அனைத்தும் இவர்
கொல்லன் என்னும் அடையாளமே..

சிவத்தை பின்னாளில் அழிக்கும் சக்தியாகவே சித்தரித்தவர்கள்.. சித்தர்களின் வழிபாட்டில் ஆதி சித்தராகவே தென்படுகிறார்..

சூரியன் போல் பகலில்  இரை அடித்து கொடுத்து தன் குழுவினரை காப்பாற்றிய வேந்தன் இவரே.. தட்சிணாமூர்த்தி என்னும் குரு பகவான் ஆதி குறவர் ஆன
 சிவனே.. இப்பெயரும் சூரியன் தெற்கில் வரும் போது தட்சனாயனம் என்பது போல தெற்கில் உள்ளவர் தட்சிணாமூர்த்தி எனவும் வடக்கில் உள்ளவர்
உத்திரன் -ருத்திரன் என அழைத்திருக்க வேண்டும்..


தென்நாடு உடைய சிவனே போற்றி என சொல்லும் அளவுக்கு இவ்வுலகில் முதல் அரசனாக வாழ்ந்தார் என்பதை உணரலாம்..

அதே போல் தென்னாட்டில் சிவன் போன்ற ஒரு அரசன் வாழ்ந்தான் ஆயின்.. அது இராவணனே.. சிவனின் வாளான சந்திரகாச வாள் இராவணன் பரிசாக பெற்றான் என சொல்லும் இராமாயணம்.. காலம் சிவனை எந்த இடத்திலும் சிவன் வாளோடு இருந்ததாக உருவகபடுத்தவில்லை.. ஈட்டி என்னும் சூலமே அவர் ஆய்தம் என பக்தி இலக்கிய காலத்திலும் காட்சிபடுத்தி உள்ளனர்..


சந்திரகாசவாள் என்பது ஈட்டியே.. இந்த வாளினை வைத்திருப்பவர்கள் பாண்டியர் என புராணங்கள் ஆணிதரமாக பதிந்துள்ளன. .  அவ்வாறு சந்திரகாச வாள் வைத்திருந்த இராவணனே முதல் சிவன் என்னும் பாண்டியன்..


சங்கு பறை உடுக்கை என ஒலிப்பது விலங்குகளை வெளியில் வர எழுப்பி விடுவதே.. வேட்டை செல்லும் முன் சங்கொலித்து செல்வது வேட்டை கிடைத்ததும் பறை  அடித்து ஆடி வருது வழக்கம்..

சுவன்-சுவரன்-விசுவன்-விசுவநாதன்-ஈசுவரன்-ஈசன் என்று சிவனை குறித்தது அனைத்தும் இவர்
கொல்லன் என்னும் அடையாளமே..

அதே போல கருமன் என்னும் சொல் கொல்லனயே குறிக்கும்.. விசுவகர்மா ஆதி கொல்லனான சிவனை குறித்ததுவே..

இவரின் ஆயுதங்கள் சங்கு சக்கரம் சூலம் உடுக்கை என இருந்தாலும் வீனையோடு இருப்பது இராவணன் என கண்டு கொள்ள எளிதாக உள்ளது..

இன்னும் உடுக்கை அடித்து குறி சொல்லும் பழக்கம் உள்ளது.. சோதிடம் பல வகை என்றாலும் குறி என்பது கணித்து சொல்வது அவ்வாறு காலத்தை கணித்து வாணசாஸ்திரம் தந்தது இராவணனே..

இராவணன் கொல்லர் என்பதில் தீயை நன்கு கையாள தெரிந்தவர் மற்றும் வாணசாஸ்திரம் அறிந்த நிலையில் இவர் மூலம் மலையோடு வேட்டையாடினாலும் அதில் காயங்களை ஆற்றும் வித்தையை கற்ற சித்த மருத்துவர் என அவரின் மருத்துவ நூல்களில் காணலாம்..

மயேசுவரன் -மயேசுரன் என சிவனை குறிப்பது இராவணனே..
இவ்வுலகில் தேவலோக சிற்பி மயன் மகளை மணந்தவன் இராவணன்..
மயேசுவரன்-மயேசுவரி (இராவணன் -மண்டோதிரி)யே

மயன் ( மாயோன்) என்னும் திருமாலின் புதல்வியே.. மண்டோதிரி.. இவர் தந்ததே சங்கும் சக்கரமும்.. தஞ்சை பெரியகோவில் நடராஜன் சிற்பத்தில் உடுக்கை நெருப்பிருக்க சங்கும்
சக்கரமுமே வடிதுள்ளதை காணலாம்..

 சக்கரம் இதன் மூலம் கடம் பானை செய்யும் குயவர்களிடம் இருந்து சக்கரம் பிறந்தது.. கடம்-சகடம்-சக்கரம்
பறை-பண்டில்-பாண்டி என எருது வைத்து பாண்டி என்றனர்..
நத்தி(எருது) வாகணம் பூட்டிய பாண்டியன் இராவணன் என்னும் சிவனே















கொல்லன் சிவனின் முக்கண் என்ன என்பதை கானும் முன்பு மயன்,குபேரன்,இராவணன் இவர்களை சற்று தெளிவாக கண்டு கொண்டால்.. முன்றாவது கண்ணை எளிதில் கண்டுகொள்ளலாம்..

இராவணன் மயனின் மகளான மண்டோதிரியை மணந்தவன்..
குபேரன் இராவணனின் அண்ணன் என இதிகாசங்கள் கூறியுள்ளது..

குபேரன் என்பது கு+பரன் உலகை மேல் இருந்து கண்காணிப்பவன்..
உலகை எவ்வாறு மேல் இருந்து கண்காணிக்க முடியும் பறந்தால் மட்டுமே..

அதற்காக மயன் வடித்ததே  விமானம்.. இதனை மயன் குபேரனுக்கு வடிவமைத்தார்.. குபேரன் நாட்டில் இருந்தது என்பது காற்றில் பறக்கும் சக்தி கொண்ட இன்றைய பாரசூட்..வடிவில்..
நெருப்பின் சுடான வாயுவை உள்ளடக்கி காற்றின் அழுத்ததை கீழ் மேல் பிரித்தால்.. பாராசூட்..
இதனை மூலம்  குபேரன் வைத்திருந்த விமானம்  பாராசூட் போன்ற ஒரு விமானமே..

ஆனால் மயன் இராவணனுக்கு இதே வடிவில் வடிவமைக்கவில்லை என்பது இதிகாசம் தெளிவாக சித்தறிக்கிறது.. ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என பழமொழி காற்றை அக்காலத்தில் எந்தளவு பிரித்து பார்த்தனர் என புலப்படும்..

காற்றின் அழுத்தம் கீழ் நோக்கி இழுக்கும் எனில் கூரை ஓடு மட்டும் அல்ல புயலென மரத்தையே வேரோடு பேத்தெடுக்கும்.. இதன் அடிப்படையில் பிறந்தது தான் விமானம்..

சொல்ல போனால் பறக்க றெக்கை தேவை என்பதை
விட பறக்க காற்றே தேவை என்பது தான் உண்மை..

எளிதில் புரிந்து கொள்ள காகிதத்தில் இன்றும் ராக்கெட் செய்து விளையாடுவோம் இதன் மூலம் ஏரோப்ளைன் கண்டுபிடித்தது என எளிதில் விளங்கும்..

காகிதத்தை வெறுமென விசினால் அது மேலே பறக்காது.. அதுவே ஒரு வடிவம் கொடுத்து வீசினால் பறந்து நெடுதூரம் செல்லும் அவ்வடிவமே றெக்கை வைத்தபடி நாம் மடிக்கும் ராக்கெட்..

புட்பக விமானம் குபேரனுக்கு கொடுத்தது போல, இராவணுக்கு மயன் வடிவமைக்கவில்லை.. காற்றை பிரித்து காற்றின் அழுதத்தை மேல் கீழ் பிறிப்பதற்கு எதுவாக றெக்கை வடிவில் அமைத்தார்..
அந்த றெக்கை வடிவமே அவரது தலை கீரிடம் வடிவில் அமையபெற்றது..இதுவே பத்து தலை கொண்ட ராவணன் என இதிகாசத்தில் மறைமுகமாக  இராவணுக்கு பத்து தலை என கூறப்படுகிறது...

பத்துதலை கொண்ட இராவணனின் புகைபடத்தை வரைந்து பார்த்தாலே தெரியும் இராவணன் உடல் அமைப்பு விமான வடிவில் இருப்பது ..

மயன் என்பவர்  தச்சன்.. இவர் தந்ததே சக்கரம் ரதம் அதனாலே சக்கரத்தை கையில் ஏந்தி மாயோன் என கூறினர்.. இந்த ரதம் வடித்த தச்சனே தச்சரதன் என்னும் தசரதன்..


அதே போல தச கீரிவன் என்பது பத்து தலைகள் அல்ல தலையில் அணிந்திருந்த புட்பகவிமாணம் என்னும் கீரிடமே..

இவ்வுலகில் இறந்த உயிரற்ற உடல் அனைத்தும் சவம் என்றே கூறுவோம்.. சவம்-சடலம் எல்லாம் சிவத்தை குறித்தது.. உயிர் என்பது சக்தி.. நம் உடலில் தோன்றும் சக்தியை ஏழு சக்தியாக பிரித்து அச்சக்தியை ஏழுசக்கரங்களில் அடக்கினால்
நமக்கு கிடைக்கும் சக்திகளாக இதிகாசங்களில் கூறபட்டது..
இதனை சித்தர்கள் பல வழிமுறைகள் கண்டாலும் சிவன் இதனை எளிதாக பகுத்தார்..அதுவே
இன்றைய ஓம்ஸ் law..

Volts=power= மூன்றாவது கண்..
அது சக்தி இதனை எந்த ஒரு எதிர்மின் அழுத்தம் தராமல் ஒன்றின் மீது தந்தால் கருகிவிடும்..
இதனையே நெற்றி கண்ணில் திறந்து நக்கீரை சுட்டெரித்தார் என புராணங்களில் வேறு விதத்தில் சொல்லியுள்ளனர்..

இதனை இன்று மின்தகன மேடை முறையே எவ்வித எதிர்மின் அழுத்தம் இல்லாமல் நேரடியாக உடலில் மின்சாரம் செலுத்தினால் சாம்பல் கிடைப்பது போல..

இதனையே பவர் மற்று வோல்ட் என மூன்றாவது கண்ணாக புராணத்தில் கூறபட்டது..

அணு என்பது வெறுமை ஆனால் இதில் இருப்பது அயனிகள் அயன் என்னும் சிவனையும்.. இதில் உயிரான சக்தியை குறித்ததுவே..

ப்ரோடான் நீயூட்ரான் எலக்டிரான் என்பதில் எலக்ட்ரான் அயன் சிவத்தையும்.. ப்ரோடான் அயன் சக்தியை உள்ளடக்கியதுவே..
சவமும் சக்தியும் (உடலும் உயிரும்) சிவசக்தி..

ஓரு அணு எத்தனை நூறாக உடைத்தாலும் அதில்
மெல்லிய சல்பர் துகள் எலக்ட்ரான்.. மற்றும் மெல்லிய குளோரைட் துகள் ப்ரோட்டான்..

மெல்லிய சல்பர் குறைந்த எண் கொண்ட  துகள் அணுவை விட்டு விலகி செல்லும்.. அதிக எண் கொண்ட சல்பர் துகள் குலோரைட் உடன் சேர்ந்து நியூட்ரானை சுற்றிகொள்ளும்..

எந்த பொருளாயினும் உராயும் போது சூடாவது இந்த குறைந்த எண் கொண்ட சல்பர் துகள்களால் தான்..ஒரு வேளை இவை அதிக துகளோடு மோதும் போது தீயாக பற்றி எரியும்..

அக்காலத்தில் உடலில் நீண்ட அரோக்கியம் மற்றும் உறுப்புகள் செயலிழக்காமல் இருக்க உடலில் இந்த சல்பர் குறைபாடுகளை கண்டு எளிதில் கட்டுபடுத்தினர்..
அவையே முக்கணிகள் மா பலா வாழை.. ரத்தம் சதையுமாக வேட்டையாடி உண்ணும் உணவு மற்றும் பால் தயிர் தேன் இதில் அதிகமாக இருக்கும்..இதனால் அணுகள் உடையாது இதன் மின்னூட்டம் பல்வேறு சக்திகளாக மனிதனிடம் பிறக்கிறது..

அதே போல நடணத்தில் தலைசிறந்த நடராஜர்
பாவம் ராகம் தாளம் சேர்த்து ஆடும் ஆட்டமே பரதம்.. தாண்டவங்கள் மயேசுரன் மயேசுவரி இருவரும் ஆடும் ஆட்டம்.. அவ்வாறு இருவரும் சேர்ந்து அம்பலத்தில் ஆடும்
ஆட்டமே பரதாட்டம் என்னும் பிரதோடம்..(பிரதோசம்)
இந்நாளில் கோயிலை சுற்றி வளம் வருவது வழக்கம்..

 அந்நாள் முடிந்து  இறந்தோர்க்கு வேட்டை ஆடுவது வழக்கம்..
வேட்டை ஆடி வருவதை அமாவாசை அன்று நடுகல் வழிபாட்டிலும்... பெளர்ணமி நாளில் சூல வழிபாட்டில் விருந்தாக படைப்பது மலை வாழ் பழங்குடியினர் வழக்கத்தில் காணலாம்..

மலைவாழ் குறவர்கள் தங்களுக்கு தேவையானவை அனைத்தும் அவர்களே செய்து கொள்வர் இதில் இவர்கள் குருவாக வழிபடும் குழு தலைவர்கள்  அனைத்தும் கற்ற முக்கியமாக சித்தர்கள்..

 கற்களை பல வடிவில் தட்டும் தட்டன் மூலிகை மற்று வைத்தியத்திற்கு எப்போதும் கற்களை செதுக்கி அரைக்க மற்றும் மூலிகை மருந்துகள் தயாரிக்க வைத்து கொள்வர் அவ்வாறு உரல் உலக்கை குழவி என வடித்தில் பிறந்ததுவே லிங்கம்..

  குழுதலைவர் அல்லது சித்தமருத்துவர் என குறிக்க குறியீடான வடிவமே லிங்கம் இதனை நடுகல் வழிபாடுவே லிங்க வழிபாடு..

மாசி சதூர்த்தசி சிவராத்திரி

வேந்தன் மேய தீம்புணல் உலகமும் சிவனை குறித்ததே வேந்தன் ராவணன் என்னும் சிவனே..

அதே போல சிவராத்திரி மாசி மாதம் சதூர்த்தசியில் வருவது கூட்டு வேட்டைகாகவே..

ஆனால் புரட்டாசி மாதம் தசமி என்பது ஆதி மலைவாழ் பழங்குடியினர் கொண்டாடிய பண்டிகை என்பது தான் உண்மை..

புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்தது வரும் முதல் 9நாள் நவராத்திரி.. நவமியில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறோம்..

ஆனால் தசமி யில் தசரா என வடக்கில் கொண்டாடிய மக்கள் ராம்லீலா என ராவணனை கொன்ற பண்டிகையாக கொண்டாடுவது பின்னாளில் இராமாயணம் கூறிய தகவலினாலே . . ஆனால் வடக்கிலும் மலைவாழ் பழங்குடினர் வழி வந்த தச்சர்கள் தங்கள் கருவிகளுக்கு புஜை செய்த நாளே தசரா..

இதனை தமிழன்   ஈசனின் நினைவாக வாழ்க்கை தந்த.. வாழ்வு அளிக்கும் கருவிகளை வணங்கி கொண்டாடுகிறோம் ஆயுதபூஜை என்று..

சரஸ்வதி யாழ் மீட்டும் கலைவாணி இராவணன் என்னும் சிவனின் புதல்வி சீதையே..
பிரம்மன் -இராமன் (மயன் என்னும் தசரதன் மகனே) ...

நன்றி

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...