புதன், 29 ஆகஸ்ட், 2018

மருதம்- பிள்ளையார்????



தமிழன் விட்டு சென்ற தடயங்கள் பல இன்னும் உள்ளது.. அதில் பிள்ளையாரும் ஒன்று..


இராமாயணம்

இராவணன் புதல்வன் அட்சய குமாரன் முருகனே..

மூத்தவன் இந்திரசித்தன் இந்திரனே. .

மருதம் என்றால் பழனம்

*வயலும் வயல் சார்ந்த இடம்..*

புராணங்கள் எடுத்து கொண்டால் என்னறவை அதில் ஒன்று திருவிளையாடல் புராணம்..

அதில் ஞாணபழதிற்கு முருகன் உலகை மூன்று முறை வலம் வந்தும் மாம்பழம் கணபதிக்கே கிடைக்கும்..

அதில் குறிப்பிட்ட மாம்பழம் என்பது மருதம்
(பழனம்) என்னும் மாம்பழமே..
மா என்றாலே வயல் மற்றும் கழனியை குறித்தது..

பழனிஆண்டி என்பதும் வயல் மற்றும் கழனியை தவறவிட்டவன் என்றே பொருள்..

நாவலந்தீவு என்னும் சொல் தமிழர்கள் அனைவராலும் அறியபட்ட குமரிகண்டத்தை குறித்தது..

இதனை நாவல் மர காடு.. நேவல் என்னும் சொல்.. கப்பல் கட்டி பல ஆயிரம் கால்நடைகள் மக்கள் கடல்கோளின் போது தப்பினர் என்பதை விடுத்து..

*நால்வகை  திணை வளங்களை உள்ளடக்கி தீவே நாவளந்தீவு..*

அதில் ஒன்றே இம் பழனம் என்னும் மருதம்

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என நால்வகை நிலமிருந்தாலும்..

குறிஞ்சி முல்லை நெய்தலில்
நாடோடியாக வாழ்க்கை வாழ்ந்தவன்..

இல்வாழ்க்கை கண்டது இந்த மருத நிலத்தில் தான்

இல்லறம் இல்லம் இடம்  குடும்பம்  என வார்த்தை பிறந்ததும் இங்கு தான்..

இல்+திரன்-குடும்பம் குடும்பமாக ஒரிடத்தில் கூட்டமாக வாழ்பவர்களே இல்திரன் என்னும் இந்திரன்
இவனே மருத நிலத்தின் தலைவன்..

இந்திரன் மழைக்கான கடவுள் தேவர்கள் தலைவன்.. என்பது போல வருணனே மழைக்கான கடவுள் என்கிறது..

இந்திரனின் வாகணம் யானை போல வாரணன் என்பதும் யாணையே.. இவற்றின் பொருள் விநாயகனே மழைகான கடவுள்..

வேள்-மணல் வெள்-வெள்ளம் என்றால் நீர்.. மண் நீர் இதனை கண்காணித்து விளைவிப்பதே
வேளாண்மை மற்றும் வெள்ளாமை..

வேள்+வி+நாயகன் (மன்னின் நிகரற்ற தலைவனே) - வேள்விநாயகன் என்றால் இந்திரனை குறிக்கும்..

குறிஞ்சி மற்றும் நெய்தல் நிலப்பரப்பில் நடுவே பள்ளமான பகுதியே முல்லை மற்றும் மருத நிலபரப்பு..

பள்ளமான பகுதியில் காட்டை அழித்து கழனி கண்டவர்கள் வேளாளன்..

இதனை தாங்கி நிற்கும் சுவடே வேளாளர் என்னும் பிரிவினர்
இவர்களை பிள்ளைமார் என அழைப்பது வழக்கம்..

மேலும் தேவேந்திரகுல வேளாளர் என தேவ+இந்திர+குல+வேளாளர் என்பதும் மருத நிலத்தின் வேளாளன்மை செய்தவர்கள்..

தேவம் என்றால் மாமரத்தையும் வயலையும் குறிக்கும்

தேவேந்திரகுல வேளாளர் என்பது வயல்களில்  குடும்பம் குடும்பமாக கூட்டமாக வாழ்ந்தவர்..

ஆற்றுபடுகைகளில் அருகிலேயே மருத நிலப்பரப்பை உருவாக்கினர்..
இந்திரன் மழைக்கான தெய்வமாக இவர்கள் பின்னாளில் வழிபட்டனர்..

இன்றைய காவிரியும் இந்த உழவுகுடிக்கு இந்திரனாலேயே உருவானது என்று புராணத்திலும் எளிய பாமரனுக்கும் விளங்கும் படி சொல்லி சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்..

அகத்தியர் காவிரியை காகமாக மாறி கழனிக்கு பாய்ச்சியவன் இந்திரன் என்னும் இந்த விநாயகனே...

மருத நிலத்தின் கணக்கதிகாரன்..வயலோடு வாழும் தேவர்கள்..


மருத நிலத்தின் கணக்கதிகாரம் தந்தவன்   கணபதி..

கிராமத்தில் இன்னும் கணக்கு என்று தெரியாமலேயே வழி சொல்லும் பழக்கமுண்டு..

செந்துறைக்கு எவ்வளவு தூரம் என்றால்?

கிழக்க கூப்பிடும் துலைதான் என்பார்..

 lower limit of audibility is defined to 0 dB.. கூப்பிடும் துலை என்பது 1.2கிமி தூரத்திற்கு மேல் எவ்வித தடையில்லை என்றால் 5கிமி குள் வரையறுக்கப்பட்டது..

தமிழனின் செழுமை இங்கேயே புலப்பட்டது.. கணிதம் இவன் வாழ்வியலோடு ஒன்றியதென்று..

மருத நிலமே.. ஒர் மனிதனுக்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்யும் கூடம்
என்றும் செல்லலாம்..
தேவலோகம்-இந்திரலோகம்-என்பது மருதநில வயல்கள் தான் 

இந்திரனே இந்த தேவர்களின் தலைவன்.. தேவன் என்றால் அரசன், தேவி என்றால் அரசி.

*சுழி என்பது தொடக்கமே..*

பிள்ளையார்சுழி என்றால்
எழுதி பார்க்க கிறுக்கியது
என்பதெல்லாம் தமிழனின் கணித தத்துவத்தை மறைக்க முயற்சிப்பதுவே..

முப்பத்துமுக்கோடி தேவர்கள் என்பது கீழே உள்ள 22 சுழியம் தான்

0 = சுழியம் -சுன்யா-zero

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் 

10000000000000000000 = பரார்த்தம் 

100000000000000000000 = பூரியம் 

1000000000000000000000 = முக்கோடி

10000000000000000000000 = மஹாயுகம் (மூபத்துமுக்கோடி)

இந்த இருபத்தி இரண்டு சுழியமே உ மற்றும் அதன் கீழே இரண்டு கோடு மற்றும் ஒரு புள்ளி..

சுழியத்தை கண்டுபிடித்ததும் உலகுக்கு அறிமுகம் செய்தவனும் மருத நிலத்தின் இந்திரன் என்னும் பிள்ளையாரே..

பிள்ளையார் சுழி என்பது (முப்பத்துமுக்கோடி) மகாயுக குறியீடே 

ஒன்றுக்கு பக்கத்தில்
சுழி போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால்

ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. ...

இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற

எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக்

குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது ...
உலகில் தமிழை தவிர எந்த நாகரிகத்திலும் இல்லை..


8 மயிர்நுண = 1 நுண்மணல் அல்லது 10^-22 " இந்த அளவு சிறிய அளவின் அவசியம் என்ன? எதை அளந்து என்ன செய்தார்கள் என்று யூகிக்க முடிகிறதா?

அதேபோல் "10^22 " இந்த பெரிய அளவின் அவசியமும் உபயோகமும் என்ன ...


இந்திரலோத்தில் கணக்குப்பிள்ளையின் அளவுகள் தொடரும்..


அளவுகள் அளக்க சாண்களையும் உழக்கையும் அந்த காலத்தில் மருத நிலத்தில் பயன்படுத்தினர்

விரல்களை அகல விரித்து கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரை உள்ள அளவு பகுதியே 1சான்

2 சான் என்பது 1முழம்

12 கைவிரல்கட்டை-1சாண்

முழம் என்றால் நடுவிரல் முதல் கைமுட்டி முடியும் அளவு

அணைவரிடமும் கைமுட்டி விரல்  இருக்கிறது தமிழன் தான் இதனை கண்டுபிடித்தான் என ஆதாரம் கல்வெட்டில் உண்டா? இலக்கியத்தில்  உண்டா?

இந்த அளவிடும் முறை அவன் பண்பாடு பாரம்பரியமாக போற்றி புகழும் வேட்டி இன்னும் தாங்கி வைத்துள்ளது..

இன்னும் தமிழனின் வேட்டி முழத்திலேயே விற்பனை செய்வார்கள்..
உங்களுக்கு 4முழம் வேணுமா இல்ல 8முழம் வேணுமா..

ஒரு அங்குலம் என்பது ஆள்காட்டி விரல் முதல் சுண்டு விரல் வரை உள்ள அளவுகள்..

இடுப்பில் கட்டும் கோவணம் துணி 5 அங்குலம்

தன் உடம்பில் கட்டை விரல் கை விரல்கள் அளவுகள் சொல்ல வைத்தனர். .

இருப்பினும் திருமந்திரம் இதனை பதிந்ததுள்ளது

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்

ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்

நீடுவர் எண்விரல், கண்டிப்பர் நால்விரல்

கூடிக்கொள்ளில் கோல அஞ்செழுத்து ஆமே


1 இம்மி 11 மும்மி
1 மும்மி 7 அணு
1 அணு 9 குணம்
1 குணம் 5 பந்தம்
1 பந்தம் 6 பாகம்
1 பாகம் 7 விந்தம்
1 விந்தம் 17 நாகவிந்தம்

1 நாகவிந்தம் 60குரல்வளைப்படி
1 குரல்வளைப்படி 60 வெள்ளம்
1 வெள்ளம்100 நுண்மணல்

*உழக்கு கணக்கு உண்டு..*

360 நெல் = 1 செவிடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி

இப்படி கணிதத்தை உலகிற்கு மனித உடலை கொண்டே அளவுகள் வடித்தது  மருதநில மக்களே..  பிள்ளை என கணிதவியாளர் மற்றும்  நிலஅளவிடுவோரை    கணக்குபிள்ளை என அழைத்தனர்.. வேளாண்மை இல் இருந்து பிறந்ததினாலே..

அதே போல் பிள்ளை என செடிகள் கண்றுகளை அழைத்தனர்

இத்தனை அளவுகள் எதனை அளக்க வின்னை அளக்கவா
இல்லை மண்ணை அளக்கவா..

















அங்குச பாகன்  என்றால் அங்குசம் ஏந்திய யானை பாகன்கள்.. யானையே
மருத நிலம் உருவாதற்கு முக்கிய காரணி எனலாம்..

அதற்கு முன் மண்ணில் கூட்டமாக தன் இனத்தோடு வாழும் உயிரினங்களில் எலியும்,எறும்பும் ஒன்று..

இதுவே மருதநிலத்தின் மூலம் தனக்கு தேவையானவை உணவை எடுத்து  கொண்டு பொந்தில் வைத்து கொள்ளும்..

அதே போல யானைக்கும் ஒரு பண்பு உண்டு...எப்பவுமே கூட்டமாய் வாழும்.. காலங்கள் கடந்தாலும்  அதன் பயண பாதைகள் நன்கு அறியும். . எங்கும் தனித்து செல்லாது கூட்டமாகவே செல்லும்..

எங்கு உணவு இருக்கும் அடுத்து எங்கு சென்றால் கிடைக்கும் என அறிந்து ஒரு பாதை அது ஏற்படுத்தி கொள்ளும் அவைகளை  ஒரு போதும் மறக்காது...

இதில் ஏதேனும் தடைகள் இருப்பின் அதற்கு பின் நீளும் பாதை வரலாற்றின் சுவடிகளில் இருந்தே கூட காலபோக்கில் அழிந்துவிடும்..
இவை மருதநிலத்தில் தெளிவாக மனிதன் இதனை புரிந்து கொண்டான்..

ஆகையால்  அனைத்து போக்குவரத்து மற்றும் உணவு  தேவைகளை யானையிடம் பார்த்து கற்று கொண்டான்..

இதன் காரணமாகவே இந்திரனின் வாகணம் யானையாகவும் பிள்ளையாரின் வாகணம் எலியாகவும் பிற்காலத்தில் சித்தரிக்க பட்டது..

ஏன் இன்னும் எறும்புகளில் கூட பிள்ளையார் எறும்பு என நம்மை அறியாமலேயே நம் பேச்சு வழக்கில் உண்டு..

அப்படி என்னதான் மருத நிலத்தில் செய்தனர்..

 வேட்டையாடி உணவு உண்ட மக்கள்..
 மேய்ச்சல் வகை விலங்குகளை உணவாக்கி உண்டனர்..
அப்போது காயங்கள் ஆற்ற
சித்தமருத்துவம் மூலிகைகள் என கண்டறியபட்டு வாழ்ந்த நிலையில் தான்..

மனிதன் தன் உணவை பிற உயிரினங்களை அழிக்காது அருகம்புல் வைத்து உணவை தயாரிக்க முடிவு செய்த இடமே மருத நிலம்..இதற்கு முன் திணை விவசாயம் என்றொன்று இல்லவே இல்லை..

வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு மருந்து இந்த அருகம்புல்லே..

முக்கியமாக நம் ரெத்தில்
உள்ள சிகப்பணுக்கள் தூய்மை செய்யவும்  நம் உடல் சக்தியை கடத்தும் திறன் கொண்டது..

அவ்வாறு அருகம்புல்லில் இருந்து வளர்ச்சி கண்டு கண்டறியபட்டதே நெல்..
நெல் என்பது  விதையே..
உமி நீக்கினால் அரிசி..

இன்றும் பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றுவது வழக்கம்..பிள்ளையாருக்கு மட்டுமே அவில்,பொறிகடலை,அரிசி கொழுக்கட்டை என அரிசியில் இருந்து வரும் அனைத்தும் படையல் இடுவர். .

திணை விவசாயம் 10000 ஆண்டுகளுக்குள் தான்
வேளாண்மை செய்தவர்கள்
வரட்சி பருவ மாற்றம் என மாறியிருப்பர்..

ஆனால்  நெல் விவசாயம் எனும் இந்த புல்லரிசியை சிவனின் காலத்தில் தென்கிழக்கே குமரி கண்டத்தில் 25000 ஆண்டுகள் முன்னர் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்..

இந்திரசித்தன் என்னும் சித்தனின் கணக்கதிகாரத்தால்..
இராவணன் வின்னை அளக்க சோதிடம் பிறந்தது ..
மயன் மண்னை அளக்க மனையடி சாஸ்திரம் பிறந்தது ..
மருத நிலத்தில் அபிவிருத்தி அடைந்த இதனை சார்ந்த பல்வேறு குடிகள் அதில் ஒவ்வொன்றிலும் எத்தனை கண்டுபிடிப்புகள்..

வாணசாஸ்திரம் வாஸ்துசாஸ்திரம் கொண்டு  சித்தமுருவத்துவம்
(ஆயுள்வேதம்) மண்டலங்களாக பிரித்து உடற்கூறு வரை என எத்தனை பரிணாமத்தை கண்டதது..

இவ்வளவும் கண்டவன் உடலினுள்ள அணுக்கு சக்தி பரிமாறவே..அப்படி செல் அணுவுக்குள் என்ன இருக்கும் என்ற தமிழன் கண்டுபிடிக்க சுழியம் என்ற வெறுமையை இருந்தது..ஆணால் அதில் ஒவ்வொன்றிலும் மிண்சாரசக்தி இருந்தை அறிந்தவன் சக்தியை கடத்தி மற்றொரு சக்தியாக மாற்றினான்.. 

அவைகள் குறையும் போதும் ஒன்றில் இருந்து மற்றொன்ருக்கு சக்தியை கடத்தி நீண்ட ஆயுள் வாழ கற்றுகொண்டான்..

இப்படி அனைத்தும் அறிந்தவன் செய்த தவறு.. குளிர்ந்த நிலபரப்பை வயல்வெளி காடுகளாக மாற்றி வெப்பத்தை அதிகரித்தான்..

வாணியல் கண்ட தேவர்கள் மட்டுமே அறிந்தனர் இவன் படைத்த இவ்வுலகம் அழியும் நேரம் நெருங்கியது என்று..

அணுவில் வெறுமையில் சேர்ந்து இருப்பது ஆண்மா என்பதை அறிந்தவன் ஆண்மாவை  பட்சிகளில் உட்புகுந்தி பட்சி சாஸ்திரம் கற்றான்.. (கூடு விட்டு கூடு பாயும் வித்தை)

குமரி கண்டத்தை கடல் தீண்டினாலும் குமரன் இந்த மருதநில தேவர்களை காத்துதந்தான்..

 தெய்வானையுடன் திருமணம் பின்பே வேளாண்மை செய்தவர்களில் சிலர் போர் கலைகளையும் பயிண்றனர் அவர்களே பின்னாளில் மள்ளர்..


இதனை வெவ்வேறு இடங்களில் புராணங்களில் எளிதாக நாம் கண்டு கொள்ள முடியும்.. மித்ரவருண சக்தி என்பது மின்சாரமே மின்கலனில் காப்பர்சல்பேட் வைத்து ஆராய்ந்தால் 1.5வோல்ட் மின்சாரம் கிடைக்கும்..

மித்ரவருணன்-மத்ர வருணன்(மருத வாரணன்)  என்பதுவே..

வருணன் மேய பெருமணல் உலகமும் என்பது மருத நிலத்திற்கு உரியதுவே.. பெருமணல் என்பது ஆற்றுபடுகை மண்னே.. 

வேந்தன் மேய தீம்புணல்
உலகமும் என்பது குறிஞ்சியே
வேடன்-வேந்தன்..
கோபதி கோமன் கோசன் என்றால் வேந்தனையே குறிக்கும் அது சிவனை குறித்தது நன்னீர் சுரக்கும் இடம் மலையே.. அதற்கு சிவன் தலையே சாட்சி..

மேலும் அகத்தியர் தந்தையே விநாயகர் மருத வாரணன் என்னும் இந்திரன்..

புராணத்தில் காகமாக விநாயகரை அகத்தியர் மூதாதையராக சித்தரித்தனர்..
அகத்தியர் தந்தையே மித்ரவருணன்..

மகாபாரத்தை வியாசர் எழுதினார் என்று சொல்லி தந்தவர்கள்..அவர்களுக்கு எழுத்து கிடையாது எழுத சொல்லி கொடுத்ததே விநாயகர் என..

 எழுத்துகளுக்கு எண்களுக்கு மூலமான விநாயகன் தந்தத்தை உடைத்து முழுகதையும் எழுதினார் என பசுமரத்து அணி போல் பதிந்து சென்றுள்ளனர்..

விநாயகரை ஆறு ஏறி குளமென  வழிபட்டது பிற்காலத்தில் பிறந்தது தான்..
ஒரு கைபிடி சேற்றை பிடித்து வயலில் இந்திரன் திசை கிழக்கில் ஈசானி மூளையில் சாமி கும்பிட்டே இன்றும்
 நாற்று நடவு செய்வர்..இதுவே தமிழனின் மருதநிலத்தின் முதல் உருவ வழிபாடு..

சேரதேசம்(கொங்கதேசம்)-வஞ்சி(கருவூர்-கரூர்)-உள்ளி விழா

சோழதேசம்-உறையூர்-பங்குனி உத்திரம்

பாண்டியதேசம்-மதுரை-ஆவணி அவிட்டம்

இந்த நாளில் சலங்கையை காலில் கட்டி தொழி மிதித்து ஆடுவர்..மருதநிலத்தவர்..


 அவ்வாறு பிடித்த மண்ணையே அருகில் உள்ள ஏரி குளம் நீர் நிலையில் கரைத்தனர்.. அதுவே பிள்ளையார் சதூர்த்தி.

மருத நிலத்தில் 28நாட்கள் இந்திரவிழாவாக கொண்டாடினர் என தமிழ் இலக்கியம்  கூறுகின்றன.. அவ்விழா நாம் மூன்று நாட்களில் கொண்டாடி முடிக்கும் பொங்கல் பண்டிகையே..

தமிழர்கள் வாழ்கையோடு பல மரபுகள் ஒன்றியுள்ளது..
 போகி என்றால் இந்திரனே.. போகி பண்டிகை காமன் பண்டிகையே.. கரும்பு வில் காமனின் பாணமே அது விநாயகனே என்னும் இந்திரன் சித்தன் உடையதுவே..

போகி பண்டிகை பாகன் யானை வைத்து போர் அடிக்கும் பண்டிகையே..பாகன்-போகன்-போகி 


செத்தலை மாதம் என்பது சித்திரை மாதமே -உழவு கணக்கு தொடக்கம் முதல் நாள்..



நன்றி

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

சனி, 25 ஆகஸ்ட், 2018

நெய்தல் - தமிழ் கடவுள் முருகன்

தமிழன் விட்டு சென்ற தடயங்கள் பல இன்னும் உள்ளது.. அதில் முருகனும் ஒன்று..

இராமாயணம்

இராவணன் புதல்வன் அட்சய குமாரன் முருகனே..

மூத்தவன் இந்திரசித்தன் இந்திரனே. .

முருகன் என்னும்வருணன்  நெய்தல் திணைக்கு தெய்வமாகவும். .

இந்திரன் என்னும் வேந்தன் மருத திணைக்கு தெய்வமாகவும்.. இருந்துள்ளனர்..

இதில் ஐந்திரம் தந்த அந்திரன் (வில் வேந்தன்) யானை முகம் தந்து அடையாளம் கொடுத்துவிட்டனர் .

விநாயகர் -கணபதி-அங்குசபாணி எல்லாம் இந்திரன் என்பதற்கான அடையாளமே..

ஆவணி மாதம் நீர்நிலை நிரம்பி அதனை நாற்று நடும் முன் சேற்றை ஒரு கடைபிடிக்க  பிடித்து வயலின் மூலயில் வணங்குவது நம் மரபு. . அவ்வாறு பிடித்த சேற்றை அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து விடுவர்.. இதுவே இன்று விநாயகர் சதுர்த்தி..

உழவுத்தொழில் கொண்ட மருத நிலத்தின் தெய்வம் கணக்கதிகாரம் தந்த அங்குசபாணியே.. இந்திரன் ஐந்திரம் தந்தவனே ..

அடுத்து

நெய்தல் திணையின் முருகன் அட்சயகுமாரன்..

மீனவர்களான பரதவர்கள் வழிபடும் தலைவன்.. மலைகளில் இருந்து கடலுக்கு இறங்கியவன் திரை விடன்..

சிப்பி +இர+மணியன்-சுப்பிரமணியன்

 முத்து+கு+மல்+அன் - முத்துகுமரன்

இரண்டும் முக்குளித்த்து முத்தெ டுப்பவன் மற்றும் முத்தை உலகம் முழுவதும் வாணிகம் செய்பவன் என்றே பொருள். .

ஆறுமுகன் சன்முகன் இதற்கும் விளக்கமுன்டு...

ஆமையன்-யாமையன் -தெற்கத்தி மைந்தன் என்றே பொருள்..

ஆமை புகும் வீடு விளங்காது என்பது..

கௌமாரம் உட்புகுத்தலை தவிர்க்கவே..

கடலோடிகள் ஆமை வைத்து உலகை சுற்றி வந்தனர்.. அவ்வாறு ஆமை தடங்களை வைத்து உலகை கடல் வழியில் சென்று சுற்றி வந்தவர் முத்துகுமரனே. .

ஆறுமுகம் என்பது நங்கூரமே.. முருகனுக்கு கையில் உள்ள வேலும் நங்கூர வடிவமே..நங்கூரம் -நங்கூரம் என்பது நான்கு கூர்மை முகமல்ல. .  அங்கூரம்-இதன் திரிபே அங்கர் என்னும் ஆங்கில சொல்லும். .

அங்காரகன் முருகனே..

குமரி கண்டமும் குமரனுக்கு

குகன்-குகையில் வாழ்பவன்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்..

உம் - ஓம் - உமர்

என்றால் குழுப்பை தானியம் நெல் சேமிக்கும் கிடங்கு..

இதனை பாதுகாக்கும் சேனையனே சேனாதிபதி குகைகளில் குன்றுகளில் குதிர் அமைத்து சிப்பாய் (காவலன்)..

இவன் கழுத்தில் காவலுக்கு வைத்திருந்தே காவடி..

காவல் புரிய முருகனால் உருவாக்கபட்டதே ஆயகலைகள். .

குறி சொல்லும் சித்தனே. .

குறவன் - குறவி

கோமக்கன்-கோமாட்டி

கோமகன்-கோமகள்

குமகன்-குமகள்

குமரன்-குமரி

அரசன்-அரசி

அரிசயை உலகம் முழுவதும் வாணிகம் செய்தது பாண்டியர் வழி வந்த முருகனே. . அவர்கள் வாழ்ந்த கண்டமே குமரி கண்டம்.. குமரி என்பவள் தென்மதுரை ஆண்ட மீனாட்சியே. .

குமரி கண்டத்தின் அழிவு பின்பு பாண்டியர் இடபெயர்ந்த இடமே கண்ணியாகுமரி என்னும் நெல்வேலி

குமரி கண்டம் அழிவின் இடம்பெயர்ந்தலே கந்தபுராணம்..

இது காந்த புராணம் கடலோடிகள் வடக்கு தெற்கு காந்தம் வைத்து நகர்ந்த நகர்வுகளே கந்தபுராணம்..

காந்தம்-காந்தன்-கந்தன்

மகாபாரதம் பின்பு பாண்டு வழி புத்திரனே மற்ற இன்றைய அறுபடை வீடுகளில் உள்ள  முருகன்கள்.

தமிழன் விட்டு சென்ற தடயங்கள் பல இன்னும் உள்ளது.. அதில் முருகனும் ஒன்று..

கார்+திகை+யன்-கார்த்திகேயன்- இரவில் திசை சொல்வோன்..  கலங்கரைவிளக்கை கண்டுபிடித்தவன்..

கதிர்+கா+மன்-கதிர்காமன்-கதிர்களை அடுத்த ஆக்கத்திற்காக காவல் செய்பவன்.. இவன் காவலுக்கு கழுத்தின் குறுக்கே வைத்திருக்கும் தடியே காவடி..

சரவன்+அன்-வில்லாளன்

சேயோன்-கப்பல் ஓட்டுனர்
ஆங்கிலத்தில் சேய்லர் இதன் திரிபே..

*மீகாமன்- வள்ளன் -கப்பலை ஓட்டுபவன்*

கடம்பன்-கட்டுமரன்-குமரன்
இந்தியாவில் எல்லா மொழிகளில் கடம்பு மரம் கடம்பு மரம் தான்..
கட்டுமரமும் கட்டுமரம் தான்..
கடம்ப மரம் நடுவில் வைரம் இருக்காது துளைவிடுவது எளிது.. தேனீ கூடுகள் அதிகம் கட்டும் மரம் இந்த கடம்பமரமே..

காமன்-என்பவன் முருகனே..
கருப்பட்டியை உலகம் முழுவதும் வாணிகம் செய்தவன்.. மாசி மாதத்தில் பதநீர் உற்பத்தி நெய்தல் பகுதியில் தொடங்குவர்.. இந்த பதநீர் உற்பத்தி பண்டிகையே காமன் பண்டிகை..

உத்ராயணம் தொடக்கத்தில் கடல் வெப்பம் காரணமாக நண்டு தைமாதம்  கடலில்  அதிகமாக கரை ஒதுங்கும்..
மகரத்தில்(மீன்) சூரியன் தை  மாதம்  கடக நட்சத்திரமான பூசத்தில் வரும் நாளே தைபூசம்..

 மீன ராசியில் சூரியன் வரும் வேளையில் கன்னி நட்சத்திரத்தில் உத்திரம் என்பது கடல் உயிரினங்கள்   கடற்கன்னிகள் இனப்பெருக்க காலம்..

 கன்னியில் இருந்து சூரியன்  காளைக்கு திருப்பும் வரும் வரை கடலுக்கு செல்லாமல் காத்திருக்க வேண்டும் அவ்வாறு வைகாசி  விசாகம் என்பது பெரிய சாகரம் (கடல்) நட்சத்திரம் வைகாசி மாதம்  இடபம்(ரிஷபம்)காளையில் சூரியன் வருவதே வைகாசி விசாகம் இன்றைய தினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்வர்..

கர்கடம்  பாண்டியன் சின்னமே.. கடகரேகை (equator) முதல் மகரரேகை (capricon) வரை உள்ள தீவே நாவலந்தீவு என்னும் குமரி  கண்டம்.. குமரி கண்டத்தை ஆட்சி செய்தது மீனாட்சி குமரனின் வள்ளியே..
வள்ளம் என்றால் கப்பலே.. வள்ளி கடலை ஆண்ட அரசியே..

சேயோன் என்றால் சேவகன் சேனைகளின் தலைவனே..

சிந்தன்-சேந்தன்-செந்தூரன் என்றால் இருக்கும் இடத்தில் கூடாரம் அமைத்து காப்பவன்.

செட்டி கப்பலுக்கு செந்தூரான் துனை என்பது கடலில் வாணிகம் செய்பவனுக்கு முருகனே கப்பலுக்கான வழிகாட்டி ..

தொல்காப்பியத்தில் இதனை தெளிவாக காணலாம் பல்வேறு கருத்துக்கள் உரைகளால் இவைகளை தமிழர்கள் காண தவறவிட்டனர்..













*சேயோன் மேய மைவரை உலகம்*

குறிஞ்சி திணை மைவரை என்றால் மலை என மட்டும் பொருள் கொண்டனர்...

இது முற்றிலும் தவறானது..

இந்த வரிகள் நெய்தல் திணைக்கு சொந்தமானது..

*சேயோன் மேய மைவரை உலகம்*

வரை என்றாலே மலை அதன் முன் என்ன மைவரை..

மைவரை என்றால் கடலில் இருக்கும் பணிமலை..

இம்-மை-இமய என்றால் பணிமலையே..

முருகன் குமரி கண்டத்தில் உள்ளவர்களை   மேடான இடதிற்கு கொண்டு வந்து காத்தவர்..

குமரி கண்டம் அழிந்த நாளே தீபாவளி.. அங்கே இறந்தவர்களுக்காக எஞ்சிய குமரி கண்ட மக்கள் இன்றும் இந்த விழா கொண்டாடுகின்றனர்..

எட்டு நாளில் குமரி கண்டம் அழிந்தது என்பதை இன்றும் தாங்கி நிற்பதே சூரசம்ஹாரம்..

காந்தம் வைத்து வடக்கே நகர்ந்த நகர்வே கந்தபுராணம்..

சஷ்டி என்பதும் அதன் குறியீடும் கடலில் திசை காட்வதே.

இதனை கந்த சஷ்டி கவசத்தில் முதல் இரண்டு வரிகள் தாங்கி நிற்கிறது..

சஷ்டியை நோக்க சரவணபவன ..
சீஷ்டர்க்கு (சிடருக்கு)உதவும் செங்கதிர் வேலன்..

இரவில் பின்னால் தன்னை போன்று பின் தொடரும் சீடர்களுக்கு  கருகியஉப்பில் காந்ததுகள்  அடைத்து வாணத்தில் தீ சுவாளையாக
வெடித்து பின்னால் வந்தவர்களுக்கு வழிகாட்டியவர் முருகனே..

தெய்வானை திருமணம் என்பது முருகன் வாணசாஸ்த்திரம் அறியவே..

இதனை கந்த புராணம் தெளிவாக சித்தரித்து உள்ளது.. தெய்வானை திருமணம் பரிசு பொருளாகவே இந்திர குலத்தவரிடம் பெறபடுகிறது..
அதற்கு முன் அவரிடம் மயிலும் சேவலும் இல்லை..

இதற்கு பின் காற்று மழை பருவங்கள் கால பொழுதுகளை கணிக்க முருகனுக்கு வாகனமாக அடையாளம் கொண்டு  மாமரத்தை வெட்டி தரபட்டது..

கரைக்கு வந்தவர்கள் விளக்குகளை வரிசையாக ஏற்றினர்.. குமரி கண்டத்தின் பேரழிவின்  எஞ்சிய குமரி நிலபரப்பரப்பில் உள்ளவர்கள் ஏற்றிய தீப ஒளியே தீபாவளி..

குமரி கண்டத்தில் இருந்து வந்தவர்கள் எதுவும் கொண்டு  வரவில்லை.. அவர்கள் முருகனுக்கு காணிக்கை யாக தந்தது முடி அவர்களை அடையாளம் காணவே..


கௌமாரம் என்பது குமார வழிபாடு ....

இந்த மார்க்கத்தில் இறந்தவர்களை வழிபடும் முறையை பின்பற்றி வளர்ந்தது.. உருவமில்லாமல் அவர்கள் இறந்த இடத்திலோ அல்லது அவர்களை புதைத்த இடத்தில் அவர்களது காவலுக்கு வைத்திருந்த  ஈட்டியை அடையளம் வைத்து வணங்குவது..

ஆயகலைகள் அனைத்தும் பயில காலபோக்கில் வீட்டில் உள்ள ஆண் பெண் இருவரையும் சிறுவயதில் கலைகள் பயில இப்பள்ளிகளில்  விட்டுவிடுவர்..

அவர்கள் அங்கு கற்று வரும் விளையாட்டு நடணம் போர்கலை பயிற்சி.. பிற்காலத்தில் குமரனை குழந்தைகயாக சித்தரிக்க காரணமாய் அமைந்தது..

தேடி வருவோர்க்கு இக்கலைகள் புகட்டபட்டது.. அதனாலே இன்றும் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்..

இவ்வழிபாட்டில் சேவ கட்டு கிடாகட்டு என விளையாட்டுகள் பிறந்தது.. வெற்றி பெற்றவை போர் பயிற்சி காவலுக்கு பயன்பட்டது.. தோல்வியடைவது கூட்டு உணவுக்கு பயன்பட்டது..

சைவ மதத்தை தழுவியே இவை பின்னாளில் வளர்ந்தது.. உருவவழிபாடு வந்த போதும் வேல் சாற்றும் பழக்கம் மற்றும் இறந்தவர்கள் நினைவாக நடுகல் வணக்கம் கொண்ட சைவ(லிங்க) வழிபாடு முறை
இன்றும் உள்ளது..

*மாயோன் மேய காடுறை யுலகமும்*
*சேயோன் மேய மைவரை உலகமும்*
*வேந்தன் மேய தீம்புனல் உலகமும்*
*வருணன் மேய பெருமணல் உலகமும்*
*முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே*

இவ்வரிகளில் பிழையில்லை
இவ்வரிகளை வரிசை படுத்திய முறையில் தவறுகள் உள்ளது..

4 ம் அடியை  இரண்டில் வரிசை படுத்தி இதன் அடையாளத்தை
மறைத்து விட்டனர்..

இரண்டாம் அடியை நீக்கினால்
மற்ற மூண்றின் அர்த்தம் மிகவும் துல்லியமாக இருக்கும்..

*மாயோன் மேய காடுறை யுலகமும்*
*வேந்தன் மேய தீம்புனல் உலகமும்*
*வருணன் மேய பெருமணல் உலகமும்*
*சேயோன் மேய மைவரை உலகமும்*
*முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே*

மாயோன் மேய காடுறை உலகம்  என்றால் முல்லை நிலத்தின் காடுகள் மற்றும் அதனோடு வாழ்ந்த இடையர் வரலாறு மற்றும்  ஆயன்கள்-ராயர்கள் என்ற தலைப்பில் முன்பு வெளியிட்டுள்ளேன் வைணவம் தழுவியது..
*காற்று*

வேந்தன் மேய தீம்புணல் உலகமும் என்றால் குறிஞ்சி
வேடன்-வேந்தன்
தீம்புனல் என்றால் நன்னீர்(சுவையான நீர்) உருவாகுமிடம்..
இதனோடு வாழ்ந்த வேடர்கள் யக்கர்கள் மறவர்கள் சைவத்தை (சிவ வழிபாடு) தழுவினர்.. *வான்*

வருணன் மேய பெருமணல் உலகமும் என்றால் மருதம்..
 இதில் பெருமணல் என்றால் ஆற்றுபடுகை..
வருணன் என்றால் மழை கடவுள் இந்திரன்..
வாரணன் என்பதும் கணபதியான இந்திரனே..
*வாரணன்-வருணன் என்றால் இந்திரனே*
 இதனோடு வாழ்ந்தவர்கள் காணாபத்தியம் தழுவிய உழவுகுடி மக்கள்.. *நிலம்*

சேயோன் மேய மைவரை உலகமும் என்றால் நெய்தல்..
வரை என்றால் மலை
  மைவரை என்றால் கடலில் இருக்கும் பணிமலை..

இம்-மை-இமய என்றால் பணிமலையே..

இந்த கடலோடு  வாழ்ந்தவர்கள் தழுவிய மார்கமே கௌமாரம்..
*நீர்*

பாலை என்ற திணையும் இங்கு உண்டு ஔவை என்னும் கொற்றவை பாழ்பட்டு
காய்ந்த மண்ணில் அம்மனே..
*நெருப்பு*

இவையோடு சூரிய வழிபாடு என்னும்  *செளமாரம்* அனைத்து  திணைகளிலும் அடங்கியது..

இந்த ஆறும் சேர்ந்த மார்க்கமே ஆசீவகம்.. இந்த ஆறுக்கும் இதற்கும்  வண்ணமுன்டு.. இதனை சித்தர்கள் கையாண்டனர்..


நன்றி

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...