தமிழன் விட்டு சென்ற தடயங்கள் பல இன்னும் உள்ளது.. அதில் பிள்ளையாரும் ஒன்று..
இராமாயணம்
இராவணன் புதல்வன் அட்சய குமாரன் முருகனே..
மூத்தவன் இந்திரசித்தன் இந்திரனே. .
மருதம் என்றால் பழனம்
*வயலும் வயல் சார்ந்த இடம்..*
புராணங்கள் எடுத்து கொண்டால் என்னறவை அதில் ஒன்று திருவிளையாடல் புராணம்..
அதில் ஞாணபழதிற்கு முருகன் உலகை மூன்று முறை வலம் வந்தும் மாம்பழம் கணபதிக்கே கிடைக்கும்..
அதில் குறிப்பிட்ட மாம்பழம் என்பது மருதம்
(பழனம்) என்னும் மாம்பழமே..
மா என்றாலே வயல் மற்றும் கழனியை குறித்தது..
பழனிஆண்டி என்பதும் வயல் மற்றும் கழனியை தவறவிட்டவன் என்றே பொருள்..
நாவலந்தீவு என்னும் சொல் தமிழர்கள் அனைவராலும் அறியபட்ட குமரிகண்டத்தை குறித்தது..
இதனை நாவல் மர காடு.. நேவல் என்னும் சொல்.. கப்பல் கட்டி பல ஆயிரம் கால்நடைகள் மக்கள் கடல்கோளின் போது தப்பினர் என்பதை விடுத்து..
*நால்வகை திணை வளங்களை உள்ளடக்கி தீவே நாவளந்தீவு..*
அதில் ஒன்றே இம் பழனம் என்னும் மருதம்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என நால்வகை நிலமிருந்தாலும்..
குறிஞ்சி முல்லை நெய்தலில்
நாடோடியாக வாழ்க்கை வாழ்ந்தவன்..
இல்வாழ்க்கை கண்டது இந்த மருத நிலத்தில் தான்
இல்லறம் இல்லம் இடம் குடும்பம் என வார்த்தை பிறந்ததும் இங்கு தான்..
இல்+திரன்-குடும்பம் குடும்பமாக ஒரிடத்தில் கூட்டமாக வாழ்பவர்களே இல்திரன் என்னும் இந்திரன்
இவனே மருத நிலத்தின் தலைவன்..
இந்திரன் மழைக்கான கடவுள் தேவர்கள் தலைவன்.. என்பது போல வருணனே மழைக்கான கடவுள் என்கிறது..
இந்திரனின் வாகணம் யானை போல வாரணன் என்பதும் யாணையே.. இவற்றின் பொருள் விநாயகனே மழைகான கடவுள்..
வேள்-மணல் வெள்-வெள்ளம் என்றால் நீர்.. மண் நீர் இதனை கண்காணித்து விளைவிப்பதே
வேளாண்மை மற்றும் வெள்ளாமை..
வேள்+வி+நாயகன் (மன்னின் நிகரற்ற தலைவனே) - வேள்விநாயகன் என்றால் இந்திரனை குறிக்கும்..
குறிஞ்சி மற்றும் நெய்தல் நிலப்பரப்பில் நடுவே பள்ளமான பகுதியே முல்லை மற்றும் மருத நிலபரப்பு..
பள்ளமான பகுதியில் காட்டை அழித்து கழனி கண்டவர்கள் வேளாளன்..
இதனை தாங்கி நிற்கும் சுவடே வேளாளர் என்னும் பிரிவினர்
இவர்களை பிள்ளைமார் என அழைப்பது வழக்கம்..
மேலும் தேவேந்திரகுல வேளாளர் என தேவ+இந்திர+குல+வேளாளர் என்பதும் மருத நிலத்தின் வேளாளன்மை செய்தவர்கள்..
தேவம் என்றால் மாமரத்தையும் வயலையும் குறிக்கும்
தேவேந்திரகுல வேளாளர் என்பது வயல்களில் குடும்பம் குடும்பமாக கூட்டமாக வாழ்ந்தவர்..
ஆற்றுபடுகைகளில் அருகிலேயே மருத நிலப்பரப்பை உருவாக்கினர்..
இந்திரன் மழைக்கான தெய்வமாக இவர்கள் பின்னாளில் வழிபட்டனர்..
இன்றைய காவிரியும் இந்த உழவுகுடிக்கு இந்திரனாலேயே உருவானது என்று புராணத்திலும் எளிய பாமரனுக்கும் விளங்கும் படி சொல்லி சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்..
அகத்தியர் காவிரியை காகமாக மாறி கழனிக்கு பாய்ச்சியவன் இந்திரன் என்னும் இந்த விநாயகனே...
மருத நிலத்தின் கணக்கதிகாரன்..வயலோடு வாழும் தேவர்கள்..
மருத நிலத்தின் கணக்கதிகாரம் தந்தவன் கணபதி..
கிராமத்தில் இன்னும் கணக்கு என்று தெரியாமலேயே வழி சொல்லும் பழக்கமுண்டு..
செந்துறைக்கு எவ்வளவு தூரம் என்றால்?
கிழக்க கூப்பிடும் துலைதான் என்பார்..
lower limit of audibility is defined to 0 dB.. கூப்பிடும் துலை என்பது 1.2கிமி தூரத்திற்கு மேல் எவ்வித தடையில்லை என்றால் 5கிமி குள் வரையறுக்கப்பட்டது..
தமிழனின் செழுமை இங்கேயே புலப்பட்டது.. கணிதம் இவன் வாழ்வியலோடு ஒன்றியதென்று..
மருத நிலமே.. ஒர் மனிதனுக்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்யும் கூடம்
என்றும் செல்லலாம்..
தேவலோகம்-இந்திரலோகம்-என்பது மருதநில வயல்கள் தான்
இந்திரனே இந்த தேவர்களின் தலைவன்.. தேவன் என்றால் அரசன், தேவி என்றால் அரசி.
*சுழி என்பது தொடக்கமே..*
பிள்ளையார்சுழி என்றால்
எழுதி பார்க்க கிறுக்கியது
என்பதெல்லாம் தமிழனின் கணித தத்துவத்தை மறைக்க முயற்சிப்பதுவே..
முப்பத்துமுக்கோடி தேவர்கள் என்பது கீழே உள்ள 22 சுழியம் தான்
0 = சுழியம் -சுன்யா-zero
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம்
10000000000000000000 = பரார்த்தம்
100000000000000000000 = பூரியம்
1000000000000000000000 = முக்கோடி
10000000000000000000000 = மஹாயுகம் (மூபத்துமுக்கோடி)
இந்த இருபத்தி இரண்டு சுழியமே உ மற்றும் அதன் கீழே இரண்டு கோடு மற்றும் ஒரு புள்ளி..
சுழியத்தை கண்டுபிடித்ததும் உலகுக்கு அறிமுகம் செய்தவனும் மருத நிலத்தின் இந்திரன் என்னும் பிள்ளையாரே..
பிள்ளையார் சுழி என்பது (முப்பத்துமுக்கோடி) மகாயுக குறியீடே
ஒன்றுக்கு பக்கத்தில்
சுழி போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால்
ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. ...
இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற
எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக்
குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது ...
உலகில் தமிழை தவிர எந்த நாகரிகத்திலும் இல்லை..
8 மயிர்நுண = 1 நுண்மணல் அல்லது 10^-22 " இந்த அளவு சிறிய அளவின் அவசியம் என்ன? எதை அளந்து என்ன செய்தார்கள் என்று யூகிக்க முடிகிறதா?
அதேபோல் "10^22 " இந்த பெரிய அளவின் அவசியமும் உபயோகமும் என்ன ...
இந்திரலோத்தில் கணக்குப்பிள்ளையின் அளவுகள் தொடரும்..
அளவுகள் அளக்க சாண்களையும் உழக்கையும் அந்த காலத்தில் மருத நிலத்தில் பயன்படுத்தினர்
விரல்களை அகல விரித்து கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரை உள்ள அளவு பகுதியே 1சான்
2 சான் என்பது 1முழம்
12 கைவிரல்கட்டை-1சாண்
முழம் என்றால் நடுவிரல் முதல் கைமுட்டி முடியும் அளவு
அணைவரிடமும் கைமுட்டி விரல் இருக்கிறது தமிழன் தான் இதனை கண்டுபிடித்தான் என ஆதாரம் கல்வெட்டில் உண்டா? இலக்கியத்தில் உண்டா?
இந்த அளவிடும் முறை அவன் பண்பாடு பாரம்பரியமாக போற்றி புகழும் வேட்டி இன்னும் தாங்கி வைத்துள்ளது..
இன்னும் தமிழனின் வேட்டி முழத்திலேயே விற்பனை செய்வார்கள்..
உங்களுக்கு 4முழம் வேணுமா இல்ல 8முழம் வேணுமா..
ஒரு அங்குலம் என்பது ஆள்காட்டி விரல் முதல் சுண்டு விரல் வரை உள்ள அளவுகள்..
இடுப்பில் கட்டும் கோவணம் துணி 5 அங்குலம்
தன் உடம்பில் கட்டை விரல் கை விரல்கள் அளவுகள் சொல்ல வைத்தனர். .
இருப்பினும் திருமந்திரம் இதனை பதிந்ததுள்ளது
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல், கண்டிப்பர் நால்விரல்
கூடிக்கொள்ளில் கோல அஞ்செழுத்து ஆமே
1 இம்மி 11 மும்மி
1 மும்மி 7 அணு
1 அணு 9 குணம்
1 குணம் 5 பந்தம்
1 பந்தம் 6 பாகம்
1 பாகம் 7 விந்தம்
1 விந்தம் 17 நாகவிந்தம்
1 நாகவிந்தம் 60குரல்வளைப்படி
1 குரல்வளைப்படி 60 வெள்ளம்
1 வெள்ளம்100 நுண்மணல்
*உழக்கு கணக்கு உண்டு..*
360 நெல் = 1 செவிடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
இப்படி கணிதத்தை உலகிற்கு மனித உடலை கொண்டே அளவுகள் வடித்தது மருதநில மக்களே.. பிள்ளை என கணிதவியாளர் மற்றும் நிலஅளவிடுவோரை கணக்குபிள்ளை என அழைத்தனர்.. வேளாண்மை இல் இருந்து பிறந்ததினாலே..
அதே போல் பிள்ளை என செடிகள் கண்றுகளை அழைத்தனர்
இத்தனை அளவுகள் எதனை அளக்க வின்னை அளக்கவா
இல்லை மண்ணை அளக்கவா..
அங்குச பாகன் என்றால் அங்குசம் ஏந்திய யானை பாகன்கள்.. யானையே
மருத நிலம் உருவாதற்கு முக்கிய காரணி எனலாம்..
அதற்கு முன் மண்ணில் கூட்டமாக தன் இனத்தோடு வாழும் உயிரினங்களில் எலியும்,எறும்பும் ஒன்று..
இதுவே மருதநிலத்தின் மூலம் தனக்கு தேவையானவை உணவை எடுத்து கொண்டு பொந்தில் வைத்து கொள்ளும்..
அதே போல யானைக்கும் ஒரு பண்பு உண்டு...எப்பவுமே கூட்டமாய் வாழும்.. காலங்கள் கடந்தாலும் அதன் பயண பாதைகள் நன்கு அறியும். . எங்கும் தனித்து செல்லாது கூட்டமாகவே செல்லும்..
எங்கு உணவு இருக்கும் அடுத்து எங்கு சென்றால் கிடைக்கும் என அறிந்து ஒரு பாதை அது ஏற்படுத்தி கொள்ளும் அவைகளை ஒரு போதும் மறக்காது...
இதில் ஏதேனும் தடைகள் இருப்பின் அதற்கு பின் நீளும் பாதை வரலாற்றின் சுவடிகளில் இருந்தே கூட காலபோக்கில் அழிந்துவிடும்..
இவை மருதநிலத்தில் தெளிவாக மனிதன் இதனை புரிந்து கொண்டான்..
ஆகையால் அனைத்து போக்குவரத்து மற்றும் உணவு தேவைகளை யானையிடம் பார்த்து கற்று கொண்டான்..
இதன் காரணமாகவே இந்திரனின் வாகணம் யானையாகவும் பிள்ளையாரின் வாகணம் எலியாகவும் பிற்காலத்தில் சித்தரிக்க பட்டது..
ஏன் இன்னும் எறும்புகளில் கூட பிள்ளையார் எறும்பு என நம்மை அறியாமலேயே நம் பேச்சு வழக்கில் உண்டு..
அப்படி என்னதான் மருத நிலத்தில் செய்தனர்..
வேட்டையாடி உணவு உண்ட மக்கள்..
மேய்ச்சல் வகை விலங்குகளை உணவாக்கி உண்டனர்..
அப்போது காயங்கள் ஆற்ற
சித்தமருத்துவம் மூலிகைகள் என கண்டறியபட்டு வாழ்ந்த நிலையில் தான்..
மனிதன் தன் உணவை பிற உயிரினங்களை அழிக்காது அருகம்புல் வைத்து உணவை தயாரிக்க முடிவு செய்த இடமே மருத நிலம்..இதற்கு முன் திணை விவசாயம் என்றொன்று இல்லவே இல்லை..
வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு மருந்து இந்த அருகம்புல்லே..
முக்கியமாக நம் ரெத்தில்
உள்ள சிகப்பணுக்கள் தூய்மை செய்யவும் நம் உடல் சக்தியை கடத்தும் திறன் கொண்டது..
அவ்வாறு அருகம்புல்லில் இருந்து வளர்ச்சி கண்டு கண்டறியபட்டதே நெல்..
நெல் என்பது விதையே..
உமி நீக்கினால் அரிசி..
இன்றும் பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றுவது வழக்கம்..பிள்ளையாருக்கு மட்டுமே அவில்,பொறிகடலை,அரிசி கொழுக்கட்டை என அரிசியில் இருந்து வரும் அனைத்தும் படையல் இடுவர். .
திணை விவசாயம் 10000 ஆண்டுகளுக்குள் தான்
வேளாண்மை செய்தவர்கள்
வரட்சி பருவ மாற்றம் என மாறியிருப்பர்..
ஆனால் நெல் விவசாயம் எனும் இந்த புல்லரிசியை சிவனின் காலத்தில் தென்கிழக்கே குமரி கண்டத்தில் 25000 ஆண்டுகள் முன்னர் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்..
இந்திரசித்தன் என்னும் சித்தனின் கணக்கதிகாரத்தால்..
இராவணன் வின்னை அளக்க சோதிடம் பிறந்தது ..
மயன் மண்னை அளக்க மனையடி சாஸ்திரம் பிறந்தது ..
மருத நிலத்தில் அபிவிருத்தி அடைந்த இதனை சார்ந்த பல்வேறு குடிகள் அதில் ஒவ்வொன்றிலும் எத்தனை கண்டுபிடிப்புகள்..
வாணசாஸ்திரம் வாஸ்துசாஸ்திரம் கொண்டு சித்தமுருவத்துவம்
(ஆயுள்வேதம்) மண்டலங்களாக பிரித்து உடற்கூறு வரை என எத்தனை பரிணாமத்தை கண்டதது..
இவ்வளவும் கண்டவன் உடலினுள்ள அணுக்கு சக்தி பரிமாறவே..அப்படி செல் அணுவுக்குள் என்ன இருக்கும் என்ற தமிழன் கண்டுபிடிக்க சுழியம் என்ற வெறுமையை இருந்தது..ஆணால் அதில் ஒவ்வொன்றிலும் மிண்சாரசக்தி இருந்தை அறிந்தவன் சக்தியை கடத்தி மற்றொரு சக்தியாக மாற்றினான்..
அவைகள் குறையும் போதும் ஒன்றில் இருந்து மற்றொன்ருக்கு சக்தியை கடத்தி நீண்ட ஆயுள் வாழ கற்றுகொண்டான்..
இப்படி அனைத்தும் அறிந்தவன் செய்த தவறு.. குளிர்ந்த நிலபரப்பை வயல்வெளி காடுகளாக மாற்றி வெப்பத்தை அதிகரித்தான்..
வாணியல் கண்ட தேவர்கள் மட்டுமே அறிந்தனர் இவன் படைத்த இவ்வுலகம் அழியும் நேரம் நெருங்கியது என்று..
அணுவில் வெறுமையில் சேர்ந்து இருப்பது ஆண்மா என்பதை அறிந்தவன் ஆண்மாவை பட்சிகளில் உட்புகுந்தி பட்சி சாஸ்திரம் கற்றான்.. (கூடு விட்டு கூடு பாயும் வித்தை)
குமரி கண்டத்தை கடல் தீண்டினாலும் குமரன் இந்த மருதநில தேவர்களை காத்துதந்தான்..
தெய்வானையுடன் திருமணம் பின்பே வேளாண்மை செய்தவர்களில் சிலர் போர் கலைகளையும் பயிண்றனர் அவர்களே பின்னாளில் மள்ளர்..
இதனை வெவ்வேறு இடங்களில் புராணங்களில் எளிதாக நாம் கண்டு கொள்ள முடியும்.. மித்ரவருண சக்தி என்பது மின்சாரமே மின்கலனில் காப்பர்சல்பேட் வைத்து ஆராய்ந்தால் 1.5வோல்ட் மின்சாரம் கிடைக்கும்..
மித்ரவருணன்-மத்ர வருணன்(மருத வாரணன்) என்பதுவே..
வருணன் மேய பெருமணல் உலகமும் என்பது மருத நிலத்திற்கு உரியதுவே.. பெருமணல் என்பது ஆற்றுபடுகை மண்னே..
வேந்தன் மேய தீம்புணல்
உலகமும் என்பது குறிஞ்சியே
வேடன்-வேந்தன்..
கோபதி கோமன் கோசன் என்றால் வேந்தனையே குறிக்கும் அது சிவனை குறித்தது நன்னீர் சுரக்கும் இடம் மலையே.. அதற்கு சிவன் தலையே சாட்சி..
மேலும் அகத்தியர் தந்தையே விநாயகர் மருத வாரணன் என்னும் இந்திரன்..
புராணத்தில் காகமாக விநாயகரை அகத்தியர் மூதாதையராக சித்தரித்தனர்..
அகத்தியர் தந்தையே மித்ரவருணன்..
மகாபாரத்தை வியாசர் எழுதினார் என்று சொல்லி தந்தவர்கள்..அவர்களுக்கு எழுத்து கிடையாது எழுத சொல்லி கொடுத்ததே விநாயகர் என..
எழுத்துகளுக்கு எண்களுக்கு மூலமான விநாயகன் தந்தத்தை உடைத்து முழுகதையும் எழுதினார் என பசுமரத்து அணி போல் பதிந்து சென்றுள்ளனர்..
விநாயகரை ஆறு ஏறி குளமென வழிபட்டது பிற்காலத்தில் பிறந்தது தான்..
ஒரு கைபிடி சேற்றை பிடித்து வயலில் இந்திரன் திசை கிழக்கில் ஈசானி மூளையில் சாமி கும்பிட்டே இன்றும்
நாற்று நடவு செய்வர்..இதுவே தமிழனின் மருதநிலத்தின் முதல் உருவ வழிபாடு..
சேரதேசம்(கொங்கதேசம்)-வஞ்சி(கருவூர்-கரூர்)-உள்ளி விழா
சோழதேசம்-உறையூர்-பங்குனி உத்திரம்
பாண்டியதேசம்-மதுரை-ஆவணி அவிட்டம்
இந்த நாளில் சலங்கையை காலில் கட்டி தொழி மிதித்து ஆடுவர்..மருதநிலத்தவர்..
அவ்வாறு பிடித்த மண்ணையே அருகில் உள்ள ஏரி குளம் நீர் நிலையில் கரைத்தனர்.. அதுவே பிள்ளையார் சதூர்த்தி.
மருத நிலத்தில் 28நாட்கள் இந்திரவிழாவாக கொண்டாடினர் என தமிழ் இலக்கியம் கூறுகின்றன.. அவ்விழா நாம் மூன்று நாட்களில் கொண்டாடி முடிக்கும் பொங்கல் பண்டிகையே..
தமிழர்கள் வாழ்கையோடு பல மரபுகள் ஒன்றியுள்ளது..
போகி என்றால் இந்திரனே.. போகி பண்டிகை காமன் பண்டிகையே.. கரும்பு வில் காமனின் பாணமே அது விநாயகனே என்னும் இந்திரன் சித்தன் உடையதுவே..
போகி பண்டிகை பாகன் யானை வைத்து போர் அடிக்கும் பண்டிகையே..பாகன்-போகன்-போகி
செத்தலை மாதம் என்பது சித்திரை மாதமே -உழவு கணக்கு தொடக்கம் முதல் நாள்..
நன்றி
🙏வசந்த் வெள்ளைத்துரை🙏